ஆகாயப்படை

தெங்கா ஆகாயப் படைத் தளத்தில் விபத்து நிகழ்ந்ததால் எஃப்-16 போர் விமானங்களின் பயிற்சிகளை சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையைச் சேர்ந்த விமானி மேஜர் சி. தீனேஸ்வரனுக்குச் சிறந்த அனைத்துலக மாணவ அதிகாரிக்கு வழங்கப்படும் ‘சதர்ன் ஸ்டார்’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இப்பதக்கத்தை வென்ற மூன்றாவது சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி இவர் ஆவார். இந்திய ராணுவக் கல்லூரியில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்தப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
வா‌ஷிங்டன்: இந்திய ஆகாயப் படைக்கான போர் விமான இயந்திரங்களை இணைந்து தயாரிக்க வகைசெய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டன.
பறந்த தமது போர்ச் சிறகுகள் ஒய்ந்த பின்பும் தொடர்ந்து வரும் தலைமுறைகளைச் சேர்ந்த போர் வீரர்களை ஊக்குவிக்கும் ஒருவர்தான் கர்னல் குஹராஜசிங்கம் கரலசிங்கம், 72.
சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படை மார்ச் 22ஆம் தேதியன்று தனது புதிய தலைவரை வரவேற்றது.